×

திங்கள் முதல் வெள்ளி வரை டிஜிபி சங்கர் ஜிவால் பொதுமக்களிடம் குறைகேட்பு

சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் டிஜிபி சங்கர் ஜிவால் பொதுமக்களிடம் புகார் மனுக்கள் பெறுகிறார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநராக சங்கர் ஜிவால் பதவியேற்ற பிறகு, காவல்துறையில் பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறார். அந்த வகையில், பொதுமக்கள் மற்றும் காவலர்களின் குறைகளை தீர்க்கும் வகையில், தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், அரசு விடுமுறை நாட்கள் தவிர்த்து, திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் காலை 11.30 மணிக்கு பார்வையாளர் அறையில் பொதுமக்கள் மற்றும் காவலர்களை நேரில் சந்தித்து டிஜிபி சங்கர் ஜிவால் புகார் மனுக்கள் பெறுகிறார். எனவே பொதுமக்கள் மற்றும் காவலர்கள் தங்களது புகார் மனுக்களை அளித்து பயன்பெறுமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

The post திங்கள் முதல் வெள்ளி வரை டிஜிபி சங்கர் ஜிவால் பொதுமக்களிடம் குறைகேட்பு appeared first on Dinakaran.

Tags : DGB Sankar Jiwal ,Chennai ,Director of ,Tamil Nadu ,DGB ,Shankar Jiwal ,
× RELATED பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக கண்ணப்பன் நியமனம்