×

டெல்லியில் துப்பாக்கி முனையில் காரை வழிமறைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேர் கைது..!!

டெல்லி: டெல்லியில் துப்பாக்கி முனையில் காரை வழிமறைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். டெல்லி பெகதி மைதான் சுரங்கப்பாதை அருகே வாடகை காரில் சென்ற டெலிவரி ஏஜெண்ட்டையும், அவரது நண்பரையும் இடைமறித்து நிறுத்திய மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் 4 பேர் துப்பாக்கியை காட்டி மிரட்டி 2 லட்சம் ரூபாயை பறித்துக்கொண்டு தப்பியோடினர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், விசாரணையை துரிதப்படுத்திய டெல்லி போலீசார் முதற்கட்டமாக 2 பேரை கைது செய்துள்ளனர். எஞ்சிய 2 பேரும் அடையாளம் காணப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டும் வகையிலும், பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையிலும் டெல்லியின் முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

The post டெல்லியில் துப்பாக்கி முனையில் காரை வழிமறைத்து கொள்ளையடித்த சம்பவத்தில் 2 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Delhi Delhi ,Delhi ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...