×

டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு..!!

டெல்லி: டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். ஜூன் 1-ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 53 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட்டிருக்க வேண்டும். கர்நாடகா இதுவரை 15 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து திறந்து விட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டி.எம்.சி. நீரை உடனே திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு அரசின் கோரிக்கை ஏற்கப்படாததால் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அரசின் அதிகாரிகள் குழு வெளிநடப்பு செய்தது.

The post டெல்லியில் நடைபெறும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Caviri Management Commission ,Delhi Delhi ,PTI ,Delhi ,
× RELATED நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின்...