×

கணவரை பிரிந்து வாழும் மகளை பெண் கேட்டு வந்த காதலனை கொல்ல முயற்சி: அதிமுக நிர்வாகி, மனைவியுடன் கைது

கோவை: கணவரை பிரிந்து தங்கள் வீட்டில் வசித்த மகளை திருமணத்திற்கு பெண் கேட்டு வந்த காதலனை அதிமுக நிர்வாகி மற்றும் மனைவி அரிவாளால் வெட்டினர். இதையடுத்து 2 பேரும் கைது செய்யப்பட்டனர். கோவை ராமநாதபுரம் கருப்பண்ண வீதியை சேர்ந்தவர் வீரக்குமார் (33). டெக்ரேட்டர். இவர், கடந்த 2017ல் ராமநாதபுரம் பகுதியில் நடந்த சுரேஷ்- கீதாமணி தம்பதி மகள் காதணி விழாவிற்கு டெக்கரேஷன் செய்தார். அப்போது வீரக்குமாருக்கும், கீதாமணிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2020ல் வீரக்குமாருக்கும், ஜனனி என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது. ஜனனி ஐடி நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார்.

கணவரின் காதல் விவகாரம் தெரிந்ததால் ஜனனி கடந்த 3 மாதத்திற்கு முன்பு அவரை பிரிந்தார். அதேபோல சுரேஷ்க்கும், கீதாமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் அவர் கடந்த 6 மாத்திற்கு முன்பு பேரூர் ஆண்டிபாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்றார். தனது தந்தையான வேடப்பட்டி பகுதி அதிமுக அம்மா பேரவை செயலாளர் சுப்பிரமணியன் (65) மற்றும் தாய் தங்கமணி (57) ஆகியோரிடம், வீரக்குமாருடன் தன்னை சேர்த்து வைக்கும்படி கூறியுள்ளார். அதற்கு அவர்என் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவு கீதாமணி போனில் அழைத்ததால், கடை ஊழியர்கள் ராம்குமார், சதீஷ்குமார் ஆகியோருடன் அங்கு வீரக்குமார் சென்று, சுப்பிரமணியன், தங்கமணியை சந்தித்து பெண் கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது சுப்பிரமணியனை வீரக்குமார் தாக்க முயன்றதால் ஆத்திரம் அடைந்த தங்கமணி அரிவாளால் அவரது தலையில் வெட்டினார். இதில் படுகாயம் அடைந்தவரை நண்பர்கள் மீட்டு கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து வடவள்ளி போலீசார் வழக்கு பதிந்து சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோரை கைது செய்தனர்.

The post கணவரை பிரிந்து வாழும் மகளை பெண் கேட்டு வந்த காதலனை கொல்ல முயற்சி: அதிமுக நிர்வாகி, மனைவியுடன் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Coimbatore ,
× RELATED அடுத்த கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் பங்கேற்கலாம்