×

உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் புதிய தார்சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றிய பகுதிகளில் புதிய சாலைகள் அமைக்கும் பணியை சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியம் திருவாணைக்கோயில் ஊராட்சியில் நீண்ட நாட்களாக சேதமடைந்த தார் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தரிடம் மனு அளித்தனர். கோரிக்கையின்படி சேதமடைந்த சாலையை அதிகாரிகள் ஆய்வு செய்து, தமிழ்நாடு முதலமைச்சர் சாலை விரிவாக்க பணி திட்டத்தின் மூலமாக சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ கலந்துகொண்டு சாலை அமைக்கும் பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதேபோன்று, சிறுபினாயூரில் இருந்து வடபாதி வரை செல்லும் தார்சாலை, காட்டாங்குளம் முதல் மலையாங்குளம் வரை செல்லும் தார்சாலை, சிறுமைலூர் தார் சாலை, எடமச்சி கிராமத்தில் சிமென்ட் சாலை உள்ளிட்ட பணிகள் தொடங்கி வைக்கப்பட்டன. சிறுபினாயூர் ஊராட்சி மாம்பாக்கம், திருவந்தவார் உள்ளிட்ட கிராமங்களில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை க.சுந்தர் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், சாலவாக்கம் ஒன்றிய செயலாளர் குமார், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் வசந்திகுமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் வெங்கடேசன், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சிவராமன், ஒன்றிய அவைத்தலைவர் ரவி, ஒன்றிய பொருளாளர் பாலமுருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் துரைவேல், சேகர், கல்யாணசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் தேன்மொழி மணி, தர்மராஜ், செல்வகுமார், முரளி, சற்குணம் மாதவன், அம்பிகா, ஊராட்சியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post உத்திரமேரூர் ஒன்றிய கிராமங்களில் புதிய தார்சாலை அமைக்கும் பணி: எம்எல்ஏ சுந்தர் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,MLA ,Sundar ,Uttara Merur ,Kanchipuram district ,Uttaramerur… ,
× RELATED கலைஞர் பிறந்தநாள் நிறைவு...