புவனகிரி : பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். அங்கிருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கரிக்குப்பம் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் புதுச்சேரி மாநில மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பரங்கிப்பேட்டை போலீசார் நேற்றுமுன்தினம் நள்ளிரவு திடீரென அந்த பகுதிக்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அந்த கிராமத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் சத்தியமூர்த்தி என்பவரது வீட்டில் மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் வந்ததை அறிந்த சத்தியமூர்த்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதையடுத்து அவரது வீட்டில் 36 பெட்டிகளில் இருந்த 1726 குவார்ட்டர் மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர்.
இவற்றின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் ரூபாய் ஆகும். இது குறித்து தகவலறிந்த கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம், சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி ஆகியோர் காவல் நிலையத்திற்கு சென்று கைப்பற்றப்பட்ட மது பாட்டில்களை பார்வையிட்டனர். இது தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சத்தியமூர்த்தியை தேடி வருகின்றனர்.
The post பரங்கிப்பேட்டை அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த மதுபாட்டில்கள் பறிமுதல்-விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிக்கு வலை appeared first on Dinakaran.