×

என்எல்சி வழங்கவுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள 6 விவசாயிகள் அலுவலகத்திற்கு வருகை

கடலூர்: என்எல்சி வழங்கவுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள 6 விவசாயிகள் அலுவலகத்திற்கு வருகை அளித்துள்ளனர். ஏற்கனவே ரூ. 30 ஆயிரம் வழங்கப்பட்ட நிலையில் மீதத்தொகை ரூ. 10 ஆயிரம் பெற்றுக்கொள்ள விவசாயிகள் வருகை தந்துள்ளனர். என்எல்சியால் செயல்படுத்தப்படும் பரவனாறு மாற்றுப்பாதை பணி தொடர்பாக இழப்பீடு வழங்க ஐகோர்ட் உத்தரவு அளிக்கப்பட்டுள்ளது. 15.5 ஹெக்டேருக்கு பயிர்கள் சேதமடைந்த நிலையில் 20 விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கப்படுகிறது.

The post என்எல்சி வழங்கவுள்ள இழப்பீட்டுத் தொகையை பெற்றுக் கொள்ள 6 விவசாயிகள் அலுவலகத்திற்கு வருகை appeared first on Dinakaran.

Tags : NLC ,Cuddalore ,Dinakaran ,
× RELATED நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்