×

கோவையில் செல்போன் கடையில் திடீரென புகுந்த பாம்பு; தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்த விற்பனையாளர்..!!

கோவை: கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் செல்போன் கடை ஒன்றில் திடீரென்று பாம்பு ஒன்று புகுந்ததால் அங்கிருந்த விற்பனையாளர் தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்த சம்பவம் அரங்கேறியிருக்கிறது. பாம்பை கண்டால் படையே நடுங்கும் என்பார்கள். அந்த அளவுக்கு பீதி ஏற்படுத்தும் வல்லமை கொண்டது தான் பாம்பு. எப்போதும் பரபரப்பாக இயங்கும் கோவை காந்திபுரம் நகர பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் விற்பனை கடை ஒன்றில் திடீரென பாம்பு உள்ளே நுழைந்ததால் அங்கிருந்த விற்பனையாளர் தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்த காட்சி அரங்கேறியது.

கடைக்குள் நெளிந்து ஓடிய பாம்பை கண்டதும் ஊழியர் அதிர்ச்சியில் வெளியே ஓடிய பரபரப்பு வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் பரவி வருகின்றன. காந்திபுரம் நகர பேருந்து நிலையம் பின்புறம் பொதுக்கழிப்பிடம் மற்றும் சிறைச்சாலை வளாகத்துக்கு சொந்தமான இடம் இருப்பதனால் அங்கிருந்து பாம்பு பேருந்து நிலைய பகுதிக்குள் புகுந்து உலா வரக்கூடும் என்பது தெரியவந்துள்ளது.

The post கோவையில் செல்போன் கடையில் திடீரென புகுந்த பாம்பு; தலைதெறிக்க வெளியே ஓட்டம் பிடித்த விற்பனையாளர்..!! appeared first on Dinakaran.

Tags : Govai ,Gandhipuram City Bus Station ,Dinakaran ,
× RELATED கோவை ஏ.டி.எம்.-மில் நூதனமுறையில் திருட்டு