×

யாரும் எதையும் பேசட்டும்; நான் அதைப்பற்றி பேசப் போவதில்லை: முதல்வர் பதவிப் பகிர்வு குறித்து டி.கே.சிவகுமார் பதில்

பெங்களூரு: யாரும் எதையும் பேசட்டும்; நான் அதைப்பற்றி பேசப் போவதில்லை என்று முதல்வர் பதவிப் பகிர்வு குறித்து டி.கே.சிவகுமார் பதில் அளித்துள்ளார். முதல் 30 மாதம் சித்தராமையாவும் அடுத்த 30 மாதம் டி.கே.சிவகுமார் முதல்வராக இருப்பார்கள் என தகவல் வெளியானது. பதவிப் பகிர்வு என்ற திட்டப்படியே முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக சிவகுமாரும் பதவி ஏற்றதாக கூறப்பட்டது. சித்தராமையாவே 5 ஆண்டுகள் முதல்வராக இருப்பார் என அமைச்சர் எம்.பி.பாட்டீல் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் எம்.பி. பாட்டீல் பேச்சு பற்றி கேட்டதற்கு அதைப் பற்றி பேசப் போவதில்லை என்று டி.கே.சிவகுமார் பதில் அளித்துள்ளார். பதவி உள்ளிட்ட கட்சிப் பிரச்சனைகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சி கவனித்துக் கொள்ளும் எனவும் சிவகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

The post யாரும் எதையும் பேசட்டும்; நான் அதைப்பற்றி பேசப் போவதில்லை: முதல்வர் பதவிப் பகிர்வு குறித்து டி.கே.சிவகுமார் பதில் appeared first on Dinakaran.

Tags : DK Sivakumar ,Bengaluru ,Chief Minister ,TK Shivakumar ,Dinakaran ,
× RELATED ஆபாச வீடியோக்களை வெளியிட்டது யார்?.....