×

முதல்வரின் நடவடிக்கைகள் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு வரவேற்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் எஸ்.சி., எஸ்.டி பிரிவு மாநில தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் நேற்று வெளியிட்ட அறிக்கை: கள்ளச்சாராயம் தயாரிப்பவர்களுக்கு ஆயுள் தண்டனையும், கடுங்காவல் தண்டனையோடு ரூ.10 லட்சம் அபராதமும் விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கள்ளச்சாராய விற்பனைக்காகப் பயன்படுத்தப்படும் அனைத்து அசையும், அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என்று கொண்டு வரப்பட்டுள்ள சட்டத்திருத்தம் மக்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. முதல்வரின் தொடர் நடவடிக்கைகள், கள்ளச்சாராய மரணங்களுக்கு நிச்சயம் முற்றுப்புள்ளி வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post முதல்வரின் நடவடிக்கைகள் கள்ளச்சாராய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும்: காங்கிரஸ் எஸ்சி, எஸ்டி பிரிவு வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : CM ,Congress SC ,ST wing ,CHENNAI ,Tamil Nadu ,ST ,State President ,Ranjan Kumar ,Dinakaran ,
× RELATED நீதிபதி சந்துரு அறிக்கையை நிராகரிக்க...