×

இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது

 

கிருஷ்ணகிரி, ஜூலை 29: கிருஷ்ணகிரி அருகே இரு தரப்பினரிடையே மோதல் சம்பவத்தில் 3 பேரை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி அடுத்த சாமந்தமலை சிப்பாயூர் கிராமத்தை சேர்ந்தவர் வாசு. இவரது மனைவி கீதா(30). அதே பகுதியை சேர்ந்தவர் சக்தி(36). கடந்த 16ம் தேதி கீதாவின் வீட்டிற்கு செல்லும் குடிநீர் குழாயை மர்ம நபர்கள் உடைத்தனர். இதைப்பார்த்த கீதா திட்டியுள்ளார். அப்போது அங்கு வந்த சக்தி, இது குறித்து கேட்டதுடன், கீதாவை தாக்கியுள்ளார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து, கீதாவை தாக்கிய சக்தியை கைது செய்தனர். அதேபோல் சக்தி தான் தாக்கப்பட்டதாக போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார், கீதா மற்றும் அவரது கணவர் வாசு ஆகிய 2 பேரை கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இரு தரப்பினரிடையே மோதல்; 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Krishnagiri.… ,Dinakaran ,
× RELATED மக்களவையில் தெலுங்கில் பதவியேற்ற...