×

சென்னை – தூத்துக்குடி 2வது நாளாக விமான சேவை ரத்து

சென்னை: தென் மாவட்டங்களில் கனமழை, வெள்ளம் காரணமாக நேற்று 2வது நாளாக சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. சென்னையில் இருந்து காலை 5.45, 10.15 மணி மற்றும் பகல் 2.10 மணிக்கு தூத்துக்குடி செல்லும் 3 புறப்பாடு விமானங்கள், அதேபோல் காலை 9.20, பகல் 1.40 மணி மற்றும் மாலை 6.05 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து சென்னை வரும் 3 விமானங்கள் என 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தென் மாவட்டங்களில் மழை வெள்ளம் காரணமாக, ஏற்கனவே ரயில், சாலை போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விமான சேவையும், இரண்டாவது நாளாக நேற்றும் பாதிக்கப்பட்டுள்ளதால் தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு கடும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

The post சென்னை – தூத்துக்குடி 2வது நாளாக விமான சேவை ரத்து appeared first on Dinakaran.

Tags : Chennai ,Tuticorin ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு...