×

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

சென்னை: சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நேற்று சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அலுவலகக் கூட்டரங்கில் சென்னைப் பெருநகர் வளர்ச்சி குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், 2023-2024ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளுடன் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் துரிதமாக செயல்படுத்தும்படி அறிவுறித்தினார்.

இக்கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழும உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, தலைமைத் திட்ட அமைப்பாளர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளையும் துரிதமாக செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Chennai Metropolitan Development Corporation ,Minister ,PK Shekharbabu ,Chennai ,
× RELATED செம்மஞ்சேரியில் விளையாட்டு நகரம்...