திருவையாறு : கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக புஷ்பமண்டப தெருகாவிரி படித்துறையில் ஈம காரியங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதனால் ஆற்றங்கரையிர் ஈம காரியங்கள் நடந்தது.திருவையாறில் புஷ்பமண்டப தெரு காவிரி படித்துறையில் இறந்தவர்களுக்கு ஈம காரியங்கள் மற்றும் முன்னோர்களுக்கு ஆண்டு தோறும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
கொரோனா தொற்று பரவாமல் இருக்க தமிழக அரசு அறிவித்த உத்தரவின்படி புஷ்ப மண்டப படித்துறை மண்டபம் பூட்டப்பட்டது.பொதுமக்கள் மண்டபம் பூட்டியதை தொடர்ந்து காவிரி ஆற்றின் தென்கரையில் புரோகிதர்களை கொண்டு 16ம் நாள் காரியம் மற்றும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தனர்.