×

சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு விரைவில் அடிக்கல்

சென்னை: கலைஞர் நூற்றாண்டு விழாவினையொட்டி சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் விரைவில் அடிக்கல் நாட்டிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கலைஞர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது குறித்து நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, கலைஞர் நூற்றாண்டை நினைவுகூரும் வகையில் மாவட்டத்திற்கு ஒரு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்றும், கோவையில் கலைஞர் செம்மொழி பூங்காவிற்கும், சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கும் விரைவில் அடிக்கல் நாட்டிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கலைஞர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சிகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்த வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் பங்கேற்பு அதிகம் இருக்க வேண்டும் என்றும், தமிழ்நாட்டிற்கு கலைஞர் ஆற்றிய பங்கின் மூலமாக நாட்டிற்கு அவர் எப்படி புகழ் சேர்த்தார் என்பது குறித்தும், அனைவரும் பயன்படுத்திடும் வகையில் கலைஞரை பற்றிய 100 பக்க வரலாறு வெளியிட்டு, அவற்றை இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்றும், இன்றைய இளைய தலைமுறையிடம் கலைஞரின் ஆளுமையை வெளிப்படுத்துவதே இதன் நோக்கமாக அமைய வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

The post சென்னையில் கலைஞர் பன்னாட்டு அரங்கத்திற்கு விரைவில் அடிக்கல் appeared first on Dinakaran.

Tags : Artist ,International Theater ,Chennai ,
× RELATED ரூ.48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள...