×

சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..!!

சென்னை: சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏழுகிணறு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி கடந்த மாதம் 2-ம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைனில் முதலீடு செய்தால் பணத்தை இரட்டிப்பாக தருவதாக இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி ரூ.30,000 முதலீடு செய்துள்ளார். ரூ.30,000 முதலீடு செய்த நிலையில் பணம் திரும்ப கிடைக்காததால் மாணவி தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் மோசடியில் ஈடுபட்ட மேற்குவங்கத்தை சேர்ந்த அமானுல்லா கான், முகமது பைசல், முகமது ஆசிப் இக்பால் கைது செய்யப்பட்டார்.

The post சென்னையில் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED வாகன நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்: அறிக்கை தர சென்னை ஐகோர்ட் ஆணை