சென்னை: சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் படகு மூலம் மீட்கப்பட்டனர். காரப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை தண்ணீர் சூழ்ந்துள்ளதாகவும் உதவி தேவை என்றும் காலையில் விஷ்ணு விஷால் பதிவிட்டிருந்தார். விஷ்ணு விஷால் பதிவின் அடிப்படையில் மீட்கச் சென்ற மீட்புக் குழுவினர் அந்த வீட்டில் இருந்த பாலிவுட் நடிகர் அமீர்கானையும் மீட்டனர்.
The post சென்னை காரப்பாக்கத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவித்த நடிகர்கள் அமீர்கான், விஷ்ணு விஷால் படகு மூலம் மீட்பு! appeared first on Dinakaran.