சென்னை: சென்னை பூவிருந்தவல்லியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் டிராவல் பேக்குடன் நின்று கொண்டிருந்த 2 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். போலீசாரின் சோதனையில் டிராவல் பேக்கில் 30 கிலோ ஹெராயின் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போதைப்பொருளை கடத்த முயன்ற பாலச்சந்திரன், ராம்குமார் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post சென்னை பூவிருந்தவல்லியில் 30 கிலோ எடையுள்ள ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.
