×

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. இதைத்தொடர்ந்து, கேரளா மற்றும் கர்நாடகாவில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என்பதால் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இன்று முதல் 3 நாட்களும் கேரளாவில் இன்று முதல் 2 நாட்களும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி நீலகிரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோயம்புத்தூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Centre ,Puducherry ,
× RELATED இந்தியாவிலேயே அதிகபட்சமாக...