×

தண்டையார்பேட்டை –விம்கோ நகர் இடையே மெட்ரோ பாலத்தில் இருந்து உதிர்ந்து விழும் சிமென்ட் பூச்சுகள்: சீரமைக்க கோரிக்கை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை – விம்கோ நகர் இடையே உள்ள மெட்ரோ ரயில் மேம்பால தூணில் இருந்து அடிக்கடி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இதில் வண்ணாரப்பேட்டையில் இருந்து தண்டையார்பேட்டை வரை சுரங்க வழியாகவும், தண்டையார்பேட்டையில் இருந்து விம்கோ நகர் ரயில் நிலையம் வரை தூண்கள் அமைக்கப்பட்டு பாலத்தின் மேலேயும் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த ரயில் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தண்டையார்பேட்டையில் இருந்து புதுவண்ணாரப்பேட்டைக்கு நேற்று முன்தினம் மெட்ரோ ரயில் சென்றபோது, அதிர்வு ஏற்பட்டு, தூண்களை இணைக்கும் பகுதியில் இருந்து சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து கீழே விழுந்தது. இதனால், மேம்பாலத்தின் கீழ் உள்ள சாலை வழியாகச் சென்ற வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவொற்றியூர் ராஜா கடை மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள பாலத்தில் இருந்து இதேபோல் சிமென்ட் பூச்சு உதிர்ந்து கீழே விழுந்தது. தொடர்ந்து இதுபோல் ஆங்காங்கே மெட்ரோ ரயில் பாலத்தில் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து விழுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து, சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post தண்டையார்பேட்டை – விம்கோ நகர் இடையே மெட்ரோ பாலத்தில் இருந்து உதிர்ந்து விழும் சிமென்ட் பூச்சுகள்: சீரமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Thandaiarpet ,Wimco Nagar ,Thandaiyarpet ,Dinakaran ,
× RELATED சென்னை தண்டையார்பேட்டையில் சரித்திர...