நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பெருந்தலைவர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். 5 ஆண்டுகளில் 12,500 பாடசாலைகளை ஏற்படுத்தி வெற்றிகரமாக நடத்தினார். இன்றைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார். இதனை காங்கிரஸ் வரவேற்கின்றது. தமிழ்நாட்டில் மிகப்பெரிய பிரச்னை காவிரி பிரச்னை. கர்நாடகாவில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரசும், தமிழக அரசோடு இணைந்து குரல் கொடுத்து வருகிறது. பரனூர் சுங்கச்சாவடியிலும் நடைபெற்ற முறைகேடு தொடர்பாகவும் விளக்கம் அளிக்க வேண்டும்.
The post காவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கக்கோரி தமிழ்நாடு அரசுடன் இணைந்து காங்கிரஸ் குரல் கொடுக்கிறது: கே.எஸ்.அழகிரி பேட்டி appeared first on Dinakaran.