×

லஞ்சம் கேட்ட டிராபிக் எஸ்ஐக்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம்

ஈரோடு: ஈரோடு தெற்கு போக்குவரத்து (டிராபிக்) போலீஸ் ஸ்டேஷனில் எஸ்ஐயாக நாகராஜ், எஸ்எஸ்ஐயாக கார்த்திகேயன் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இருவரும் கடந்த சில தினங்களுக்கு முன் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, மது போதையில் சிக்கியவர்களிடம் அபராதம் விதிக்காமல் இருக்க லஞ்சம் கேட்டு பேரம் பேசியதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து எஸ்ஐ நாகராஜ், எஸ்எஸ்ஐ கார்த்திகேயன் இருவரையும் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து ஈரோடு எஸ்பி ஜவகர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் கேட்டபோது, நிர்வாக காரணங்களுக்காக 2 பேரும் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

The post லஞ்சம் கேட்ட டிராபிக் எஸ்ஐக்கள் ஆயுதப்படைக்கு அதிரடி மாற்றம் appeared first on Dinakaran.

Tags : Erode ,Nagaraj ,SI ,Karthikeyan ,SSI ,South Traffic (Traffic) Police Station ,
× RELATED ஈரோட்டில் வீட்டுக்கு தீ வைத்துவிட்டு...