×

பீகார் மாநிலம் பாட்னாவில் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்

பீகார்: பீகார் மாநிலம் பாட்னாவில் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பங்கேற்கின்றனர். சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், உத்தவ் தாக்கரே பங்கேற்கின்றனர். தேசிய வாத காங். தலைவர் சரத் பவார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கின்றனர். இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜா, சிபிஎம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கலந்து கொள்கின்றனர் என்று ஜே.டி.யூ. தெரிவித்துள்ளது.

The post பீகார் மாநிலம் பாட்னாவில் 23-ம் தேதி நடைபெறும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. G.K. Stalin ,Bihar ,Congress ,Mallikarjun ,Patna, Bihar State ,G.K. Stalin ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...