×

கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது சிஎஸ்கே அணி: போலீசாரின் முயற்சியால் மைதானத்துக்கு சென்றனர்

 

சென்னை, மே 1: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று பிற்பகல் 3.30 மணிக்கு சிஎஸ்கே – பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி நடைபெற்றது. முன்னதாக, எம்.ஆர்.சி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த சிஎஸ்கே வீரர்கள், நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு அங்கிருந்து சென்னை அணியின் மஞ்சள் நிற பேருந்துகளில் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குக் கிளம்பினர்.சாந்தோம் வழியாக சென்றுகொண்டிருந்தபோது, திடீர் போக்குவரத்து நெரிசலில் சிஎஸ்கே அணியின் வாகனம் சிக்கியது. இன்னும் ஒரு மணி நேரத்தில் போட்டி தொடங்கும், அதற்கு முன்பாக டாஸ் போடப்பட வேண்டும் என்ற நிலையில், போக்குவரத்து நெரிசல் சற்றும் குறையாததால் சிஎஸ்கே அணியினர் பரபரப்படைந்தனர். போலீசாரும் செய்வதறியாது திகைத்து நின்றனர். 20 நிமிடங்களுக்கும் மேலாக போக்குவரத்து நெரிசலில் சிஎஸ்கே வீரர்கள் பயணித்த வாகனம் சிக்கியது. நிலைமையை உணர்ந்து, ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, போக்குவரத்தை மாற்றி, சென்னை அணி வீரர்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இதையடுத்து சிஎஸ்கே வீரர்களின் வாகனம் சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்குச் சென்றது.

The post கலங்கரை விளக்கம் அருகே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது சிஎஸ்கே அணி: போலீசாரின் முயற்சியால் மைதானத்துக்கு சென்றனர் appeared first on Dinakaran.

Tags : CSK ,Chennai ,Chennai Chepakkam Ground ,Punjab ,Dinakaran ,
× RELATED கணுக்கால் அறுவை சிகிச்சை சக்சஸ்: ஷர்துல் தாகூர் `மகிழ்ச்சி’ பதிவு