இதுகுறித்து சென்னை தங்கம், வைர வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறியதாவது: கடந்த ஆண்டு மட்டும் அட்சய திருதியை அன்று ரூ.11 ஆயிரம் கோடிக்கு தங்கம் விற்பனை ஆனது. இந்தாண்டு 40 சதவீதம் அளவுக்கு விற்பனை அதிகரித்துள்ளது. அதாவது, தங்கம் விலை என்பது 20 சதவீதமும், அதேநேரத்தில் விற்பனை 20 சதவீதமும் அதிகரித்து காணப்பட்டது. 2 நாட்களில் மட்டும் 22 ஆயிரம் கிலோ அளவுக்கு தங்கம் விற்பனையானது.
இதில் தங்கத்தின் மதிப்பு மட்டும் ₹14,500 கோடி அளவுக்கு இருக்கும். வெள்ளி உள்ளிட்ட நகைகள் சுமார் 500 கோடி ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தத்தில் ₹15 ஆயிரம் கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
The post அட்சயதிருதியை ஒட்டி 2 நாட்களில் மட்டும் ரூ.15 ஆயிரம் கோடிக்கு நகைகள் விற்பனை appeared first on Dinakaran.