×

உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி

சென்னை: உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். உதவி பேராசிரியர் பணிக்கு முனைவர் பட்டம் கட்டாயமல்ல, விருப்ப தகுதியாகவே இருக்கும் என யுசிஜி நேற்று அறிவித்தது. முனைவர் பட்டம் பெறுவதில் உள்ள சிக்கலை கருதி மாணவர்கள் நலனுக்காக நடவடிக்கை எடுத்துள்ளதாக யுசிஜி கூறியுள்ளது. தேசியத் தகுதித் தேர்வுகளை தேசிய தேர்வு முகமை நடத்துவதைப் போன்று தமிழ்நாடு மாநில தகுதித் தேர்வை நடத்த புதிய அமைப்பை தமிழக அரசு நிறுவ வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

The post உதவி பேராசிரியர் பணிக்கு ஆண்டுக்கு இருமுறை மாநிலத் தகுதித் தேர்வை நடத்த வேண்டும்: அன்புமணி appeared first on Dinakaran.

Tags : Anbumani ,Chennai ,BAMA ,President ,Dinakaran ,
× RELATED கச்சா எண்ணெய் விலை சரிவால் பெட்ரோல்,...