- அண்ணாமலை
- செலூர் ராஜு
- மதுரை
- முன்னாள்
- அஇஅதிமுக
- அமைச்சர்
- ஊர்மெச்சிக்குளம்
- பாஜக
- ஜனாதிபதி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- தின மலர்
மதுரை: மதுரை அருகே ஊர்மெச்சிகுளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று, தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் கற்று வர வேண்டும்’’ என்றார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டென்ஷனான செல்லூர் ராஜூ, ‘நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் உள்ளது. அதை பற்றி கேளுங்கள்‘ என்றார்.
The post பண்புடன் பேச பாரின்ல கத்துட்டு வாங்க அண்ணாமலை: செல்லூர் ராஜூ அட்வைஸ் appeared first on Dinakaran.