×

அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு துண்டாகும்: அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை

மதுரை: அண்ணாவை பற்றி தவறாக பேசுவோரின் நாக்கு துண்டாகும் என அண்ணாமலைக்கு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை விடுத்துள்ளார். மதுரையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசியதாவது: அண்ணாவையும், எம்ஜிஆரையும் வேறு, வேறு தாய் பெற்றிருந்தாலும், ஒரே மனம், குணம் படைத்தவர்கள். அண்ணா மீது எம்ஜிஆர் அதிக பாசம் கொண்டிருந்தார். எம்ஜிஆர் பெயரைக் கூட மறந்து விடுவோம், ஆனால் அண்ணாவின் பெயரை மறக்க முடியாது. தற்போது சிலர் படித்தவனுக்கு பித்துப்பிடித்தது போல் கேலி பேசுகின்றனர். அண்ணாவை பற்றி கேலி பேசுகின்றனர். இறந்த தலைவர் பற்றி இழிவாக பேசுபவன் இழிபிறவி தான்.

கலைஞரை நாங்கள் தற்போதும் மரியாதையாகத்தான் பேசுவோம். ஆனால் மறைந்த தலைவரை மதிக்காமல் பேசினால், தமிழ் சமூகம் மிதித்து விடும். ஆளுங்கட்சி என்று மிதப்பில் பேசலாம். அண்ணாவை பற்றி பேசினால் நாக்கை துண்டாக்கும் கொள்கை மறவர்கள் இருக்கிறார்கள். அண்ணா பல்வேறு சாதனை செய்தவர். அண்ணாவை பற்றி எவன் தவறாக பேசினாலும் அவன் நாக்கு அழுகிவிடும். ஏழை, எளிய மக்கள் முன்னேறியதற்கு பெரியார், அண்ணா காரணம் என்றார். அண்ணா குறித்து தவறான கருத்தை கூறிய பாஜ தலைவர் அண்ணாமலையை, ஏற்கனவே ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் நாக்கு துண்டிக்கப்படும் என்று எச்சரித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post அண்ணாவை பற்றி தவறாக பேசினால் நாக்கு துண்டாகும்: அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Anna ,Sellur Raju ,Annamalai ,Madurai ,Former minister ,
× RELATED திமுக, அதிமுக யார் ஆட்சிக்கு வந்தாலும்...