×

அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: அரசுக்கு வைகோ வேண்டுகோள்

சென்னை: அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு வைகோ ேவண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் அண்மைக்காலமாக, அவசர சிகிச்சைக்காக ஆம்புலன்சில் செல்பவர்கள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக்கொண்டு, கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் உயிர் காக்கும் நேரத்தை சாலையிலேயே கழிக்கும் அவலநிலை ஏற்படுகிறது. இதை போக்குவதற்கு சாலை விதிகளை சீரமைத்து, ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக விரைவுப் பாதையை உருவாக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக்கு நோயாளியை அழைத்துச் செல்லும்போது சம்பந்தப்பட்ட போக்குவரத்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, போக்குவரத்தை சீர்செய்திட வேண்டும். கூடுதலாக ஆம்புலன்சிலிருந்து போக்குவரத்து காவல் துறையினரை தொடர்பு கொள்ளும் வகையில், ஆம்புலன்சில் வயர்லெஸ் கருவி பொருத்திட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post அவசர சிகிச்சை வாகனங்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும்: அரசுக்கு வைகோ வேண்டுகோள் appeared first on Dinakaran.

Tags : Vigo ,Chennai ,Tamil Nadu ,Govandugol ,Dinakaran ,
× RELATED மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள்...