×

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக பேசிய அண்ணாமலைக்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம்

சென்னை: அண்ணாமலை தனி நோக்கத்துடன் செயல்படுவதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றச்சாட்டு அளித்துள்ளார். ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் தராதரமும் இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளர். நாடாளுமன்ற உறுப்பினராகவோ சட்டமன்ற உறுப்பினராகவோ ஏன் கவுன்சிலராகவோ இருந்ததில்லை கூட அண்ணாமலை இருந்ததில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டி:

அதிமுகவை படிக்காவிட்டால் அண்ணாமலை விலகிக்கொள்ளலாம் என்றும் கண்டனம் தெரிவித்தார். ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கோ பா.ஜ.க.வுக்கோ எந்த தகுதியும் கிடையாது. கொலை, பலாத்காரம் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்களுக்கு பதவி கொடுக்கிறார் அண்ணாமலை எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஊழலுக்காக கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பா.ஜ.க. கட்சியில்தான் எனவும், 40 சதவீத கமிஷன் பெற்ற ஆட்சி என்றால் அது பா.ஜ.க. ஆட்சிதான் எனவும் தெரிவித்துள்ளார். மோடி மீண்டும் பிரதமர் ஆவதில் அண்ணாமலைக்கு விருப்பமில்லை என்று சி.வி.சண்முகம் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

டி.டி.வி தினகரன் பேட்டி:

அரசியலுக்கு புதியவர் என்று அண்ணாமலை மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகிறார்; வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி வருகிறார் அண்ணாமலை என டி.டி.வி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளர். பாஜக தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு முதலில் வாய்ப்பை ஏற்படுத்திகொடுத்தவர் ஜெயலலிதா எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கே.பி.முனுசாமி பேட்டி:

பாஜகவுடன் கூட்டணி தொடருமா என்பது அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரியும் என்று கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பிறகு யார், யாருக்கு பயந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவரும் என்றும் அவர் கூறியுள்ளார். ஜெயலலிதாவை விமர்சித்த அண்ணாமலைக்கு அதிமுக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

The post முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக பேசிய அண்ணாமலைக்கு அதிமுக அமைச்சர்கள் கடும் கண்டனம் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Annamalai ,Chief Minister ,Jayalalithaa ,CHENNAI ,Former minister ,CV ,Shanmugam ,Jayalalitha ,
× RELATED ஓபிஎஸ் குறித்து அண்ணாமலை பேச்சு...