பொன்னேரி: திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பொன்னேரி மாவட்ட அலுவலகத்தில், திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் சிறுணியம் பலராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்றுமுன்தினம் மாலை நடந்தது. இதில், மதுரையில் அடுத்த மாதம் 20ம் தேதி நடக்கும் அதிமுக எழுச்சி மாநாட்டிற்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் குடும்பத்தோடு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள வேண்டும் என பலராமன் வேண்டுகோள் விடுத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் பானு பிரசாத், சோழவரம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், கும்மிடிப்பூண்டி ஒன்றிய செயலாளர் கோபால்நாயுடு, மீஞ்சூர் பேரூர் செயலாளர் பட்டாபிராமன், பூண்டி ஒன்றிய செயலாளர் பிரசாத், பொன்னேரி நகர செயலாளர் செல்வகுமார், மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் சிவக்குமார், மாவட்ட துணைச் செயலாளர் சியாமளா தன்ராஜ், மாவட்ட துணைச் செயலாளர் சுமித்ராகுமார்,
பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், பொதுக்குழு உறுப்பினர் கமலா, எம்ஜிஆர் இளைஞர் அணி துணைச் செயலாளர் பஞ்சட்டி நடராஜன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் சுதாகர், 15வது வட்ட செயலாளர் காமராஜ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் பத்மஜா ஜனார்த்தனன், திருவள்ளூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட பிற அணி நிர்வாகிகள், சோழவரம், மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி ஒன்றியம். பொன்னேரி நகர மீஞ்சூர், பேரூர், ஆரணி, பேரூர் கும்மிடிப்பூண்டி நகரக் நிர்வாகிகள் கிளைக் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
The post அதிமுக ஆலோசனைக் கூட்டம் appeared first on Dinakaran.