×

ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு சட்டப் பேரவையில் நேற்று ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பவானிசாகர் பண்ணாரி (அதிமுக) பேசுகையில், ‘‘அருந்ததியினர் மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களுக்கென சமுதாய நலக் கூடங்கள் அமைத்து தர வேண்டும். ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. அதனால், மாணவர் சேர்க்கையும் குறைவாக உள்ளது. எனவே, ஆசிரியர் காலி பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்’’ என்றார்.

The post ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Adi Dravidar ,Chennai ,Tamil Nadu Legislative Assembly ,Tribal Welfare Department ,Adi Dravidar Welfare Department ,Dinakaran ,
× RELATED அம்மையார்குப்பத்தில் ஆதிதிராவிடர்...