- ஆச்சிராம்பாக்கம் வடக்கு யூனியன் திமுக
- பாசிசம் வீழ்ந்து இந்தியா வெல்லட்டும்
- சட்டமன்ற உறுப்பினர்
- மதுராந்தகம்
- திமுக
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றியம்
- முதல் அமைச்சர்
- எம். ஸ்டால்
- மொரப்பாக்கம்
- மதுராந்தகம்
- ஆச்சிரப்பக்கம் வடக்கு யூனியன் டிஎம்கே
மதுராந்தகம்: காஞ்சிபுரம் தெற்கு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மதுராந்தகம் அடுத்த மொறப்பாக்கம் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் தம்பு தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் நாராயணன், அவைத்தலைவர் சிவபெருமான், ஒன்றியக்குழு துணை பெருந்தலைவர் விஜயலட்சுமி கருணாகரன், கலை இலக்கிய அணி அமைப் பாளர் கண்ணதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளரணி தலைவர் மோ.கோ.மணி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி ஜி.செல்வம், தொகுதி பொறுப்பாளர் கான்ஸ்டன் டைன் ரவீந்திரன், தலைமை கழக பேச்சாளர் ரவீந்திரன், நாத்திகம் நாகராஜன் உள்ளிட்ட கலந்துகொண்டு பேசினர். விழாவில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ பேசுகையில், ”காங்கிரஸ் ஆட்சியில் ரூ.400 விலைக்கு விற்ற காஸ் தற்போதுள்ள பாஜக ஆட்சியில் 1000 ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது.
இதனால் மகளிர் பாதிக்கப்பட்டுள்ளனர். திமுக தேர்தல் வாக்குறுதிபடி ஊரக வேலை உறுதி திட்டத்தில் 300 ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை அரசு கொள்முதல் நிலையம் மூலம் விற்பதால் விவசாயிகள் லாபம் அடைந்து வருகின்றனர். காஞ்சிபுரத்தில் முதலமைச்சர் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அன்றிலிருந்து மகளிருக்கு உரிமை தொகை முறையாக வங்கிகளில் செலுத்தப்பட்டு வருகிறது. 15 லட்சம் மகளிருக்கு கலைஞர் உரிமை தொகை வழங்கப்படுகிறது” என்றார். இதைத்தொடர்ந்து அச்சிறுப்பாக்கம் ஒன்றியங்களில் உள்ள அரசு பள்ளிகளில் பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை, 10 விவசாயிகளுக்கு மருந்து தெளிப்பு இயந்திரம் மற்றும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 2 ஆயிரம் மகளிருக்கு புடவைகளை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் வழங்கினார். கூட்டத்தில், மாவட்ட கவுன்சிலர் மாலதி, நிர்வாகிகள் வேதாச்சலம், வேணு, கோபி, சிலம்பரசன், சரத்குமார், இளங்கோ, பத்மா, சசிகுமார், ராம்குமார் மற்றும் இளைஞர்கள், கழக முன்னோடிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம்: எம்பி, எம்எல்ஏ பங்கேற்பு appeared first on Dinakaran.