×

தேவைக்கு ஏற்ப புதிய மதுபான கடைகள் திறக்கப்படும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில் விற்கப்படும் பாக்கெட் சாராயம் மற்றும் சாராய பாட்டிலில் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டி விற்க உத்தரவு பிறப்பித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தகவல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 545 மதுபானக் கடைகள் உள்ளன. இன்றைய மக்கள் தொகைக்கு ஏற்ப மதுபானக் கடைகள் தேவைப்படுகிறது.

பெங்களூருவில் இரவு 1 மணிவரை மதுக்கடைகள் திறந்திருப்பது போல் புதுச்சேரியிலும் திறக்கப்படுமா கோவில், மருத்துவமனை மற்றும் பள்ளிகளுக்கு அருகில் உள்ள மதுபானக் கடைகளை அகற்ற கோரிக்கை வைத்தனர். புதுச்சேரியில் புதிய மதுபானக் கொள்கை கொண்டு வருதற்கு அரசு தயாராக உள்ளது. புதுச்சேரிக்கு வருவாய் மதுபானக் கடைகள் மூலம்தான் வருகிறது என்று ரங்கசாமி கூறியுள்ளார்.

The post தேவைக்கு ஏற்ப புதிய மதுபான கடைகள் திறக்கப்படும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Rangasamy ,Puducherry Legislature ,Puducherry ,Rangasami ,Dinakaran ,
× RELATED டெல்லி முதலமைச்சர் பதவியை ராஜினாமா...