×

கலெக்டர் தகவல் புதுகை: 10 பேருக்கு கொரோனா

புதுக்கோட்டை, டிச.4: புதுக்கோட்டை மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால், மாவட்டத்தின் மொத்தத் தொற்றாளர் எண்ணிக்கை 11,156 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், சிகிச்சையில் இருந்தவர்களில் 15 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால், மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 10,914 ஆக உயர்ந்துள்ளது.புதிய உயிரிழப்புகள் இல்லை. இதனால், மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 154 ஆக தொடர்கிறது. சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 88 ஆக குறைந்துள்ளது.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...