×

மழை இல்லாததால் மாநகராட்சி நிவாரண முகாமில் இருந்த 35 பேர் திரும்பினர்

நாகர்கோவில், டிச.4:  நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் புரெவி புயலை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீனாட்சிபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி, வடிவீஸ்வரம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் ஒழுகினசேரி கலைவாணர் அரசு பள்ளி ஆகிய 3 பள்ளிகளில் வெள்ள நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தன.
மேலும் பாறைக்கால்மடம் உள்பட தாழ்வான பகுதிகள் மற்றும் நகரம் முழுவதும் மக்கள் பாதுகாப்பாக இருக்கவும், தேவைப்படுவோர் நிவாரண முகாம்களில் தங்கவும் ஆட்டோக்களில் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதில் பாறைக்கால் மடத்தில் தற்காலிகமாக டென்ட் அமைத்து இருந்த 35 பேர் வடிவீசுவரம் அரசு தொடக்க பள்ளியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இவர்களுக்கு அம்மா உணவகம் மூலம் நேற்று முன்தினம் இரவு சாப்பாட்டு பொட்டலமும், நேற்று காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது. தொடர்ந்து மழை இன்மையால், அவர்கள் அனைவரும் தங்கள்  வீடுகளுக்கு சென்றதாக மாநகர் நல அலுவலர் கின்ஷால் கூறினார்.

Tags : relief camp ,corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு