×

புரெவி புயலால் பரவலாக மழை

தஞ்சை, டிச. 3: புரெவி புயல் எதிரொலியால் தஞ்சை மாவட்டத்தில் நேற்று முழுவதும் விட்டு விட்டு மழை பெய்தது. இலங்கை அருகே நிலை கொண்டுள்ள புரெவி புயலால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை நிலையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் நேற்று காலை முதல் தஞ்சை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்தது. மேலும் குளிர்ந்த காற்று வீசியது, இதனால் இரவு கடும் குளிர் நிலவியது. இதேபோல் பாபநாசம் பகுதியிலும் நேற்று காலை முதல் மழை பெய்தது.

பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூரில் நேற்று காலை 6 மணி முதல் தூறல் மழை பெய்தது. மதியம் 1.30 மணியளவில் 15 நிமிடத்துக்கு மழை பெய்தது. அதைதொடர்ந்து மழை தூறி வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. நேற்று மாலை 4 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு (மி.மீ): தஞ்சை 6, வல்லம் 5, குருங்குளம் 7, திருவையாறு 3, பூதலூர் 2, திருக்காட்டுப்பள்ளி 2, கல்லணை 1, ஒரத்தநாடு 6, நெய்வாசல் தென்பாதி 10.60, வெட்டிகாடு 8, கும்பகோணம் 8, பாபநாசம் 7, அய்யம்பேட்டை 14, திருவிடைமருதூர் 10, மஞ்சலாறு 21, அணைக்கரை 14, பட்டுக்கோட்டை 10, அதிராம்பட்டினம் 13, ஈச்சன்விடுதி 5, மதுக்கூர் 5, பேராவூரணி 2 என மழை பதிவாகியுள்ளது.

Tags : storm ,
× RELATED மிக்ஜாம் புயல் பாதிப்பு; 148.54 கோடி...