பட்டுக்கோட்டையில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

டெல்லியில் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் கோவிந்தசாமி, விவசாய சங்க மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் தலைமை வகித்தனர். தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன், நகர பொறுப்பாளர் செந்தில்குமார், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பார்த்திபன் மற்றும் பல்வேறு கட்சியினர் மழையில் குடைகளை பிடித்தவாறு பங்கேற்றனர்.

இந்திய கம்யூனிஸ்ட் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினர் மகேந்திரன் தெரிவித்ததாவது: வேளாண்மை சட்டத்தை திரும்ப பெறுவதற்கு பதிலாக அதை எதிர்க்கும் விவசாயிகள் மீது அடக்குமுறையை கையாளுகிறது. விவசாயிகளின் நலனுக்கு எதிரான வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். சட்டங்களை நிராகரித்து தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். இல்லையென்றால் எடப்பாடி அரசை மக்கள் நிராகரிப்பர். மேலும் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டங்கள் நடைபெறும் என்றார்.

Related Stories: