தமிழகம் முழுவதும் போராட்டம் கலெக்டர் தகவல் தஞ்சை மூன்றாம் நிலை நூலகருக்கு விருது

தஞ்சை, டிச. 3: பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் சார்பில் 2020 டாக்டர் எஸ்.ஆர்.அரங்கநாதன் விருதை தஞ்சை மூன்றாம் நிலை நூலகருக்கு கலெக்டர் கோவிந்தராவ் வழங்கினார். தஞ்சை அருகே மெலட்டூர் கிளை நூலக 3ம் நிலை நூலகர் பழனிவேல். இவர் நூலக வாசகர் நரசிம்மஅய்யர் மூலமாக மும்பையை சேர்ந்த மாயா என்பவர் மெலட்டூர் கிளை நூலகத்திற்கு 4 ஆயிரம் சதுர அடி காலி மனையை தானமாக பெற்று தந்தார். மேலும் அந்த இடத்தில் மயிலாடுதுறை எம்பி ராமலிங்கம், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் செலவில் நூலக கட்டிடம் கட்டுவதற்கும் சீரிய பணியாற்றினார். இதை தமிழக அரசு பள்ளி கல்வித்துறை பொது நூலக இயக்ககம் பாராட்டி அவருக்கு 2020ம் ஆண்டுக்கான டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது அறிவித்தது. இதையடுத்து நேற்று கலெக்டர் கோவிந்தராவ், மெலட்டூர் கிளை நூலக 3ம் நிலை நூலகர் பழனிவேலுவை பாராட்டி விருது வழங்கினார். இந்த விருது 50 கிராம் வெள்ளி பதக்கம், ரூ.5 ஆயிரத்துக்கான காசோலை கொண்டது. மாவட்ட நூலக அலுவலர் சண்முகநாதன், கண்காணிப்பாளர் கதிரேசன் உடனிருந்தனர்.

Related Stories: