தமிழ் பல்கலை. துணைவேந்தர் தகவல் தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தஞ்சை, டிச. 2: தஞ்சையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. தஞ்சை ஆர்டிஓ அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. தஞ்சை மாவட்டத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் 500 கட்டுப்பாட்டு கருவிகள், 1,300 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் ஆகியவை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு அனுப்புமாறு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆர்டிஓ வேலுமணி முன்னிலையில் தஞ்சை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து லாரிகள் மூலம் கிருஷ்ணகிரிக்கு அனுப்பும் பணி நடந்தது. அப்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Related Stories: