×

நெரூர் பூந்தோட்டம் பகுதியில் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் கட்டுப்படுத்த நடவடிக்கை மக்கள் வலியுறுத்தல்

கரூர், டிச. 3: கரூர் நெரூர் சாலையில் பூந்தோட்டம் பகுதியில் அடிக்கடி நடைபெறும் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வலியுறுத்தி உள்ளனர். கரூரில் இருந்து நெரூர் செல்லும் சாலையில் மின்னாம்பள்ளி பகுதியை தாண்டியதும் பூந்தோட்டம் பகுதி உள்ளது. இந்த பகுதியில் வளைவு சாலை உள்ளது.அதிகளவு வாகன போக்குவரத்து நடைபெறும் இந்த பகுதியில் பூந்தோட்டம் பகுதியில் ஆபத்தான வளைவு பாதை உள்ளதால் அடிக்கடி வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.எனவே, இந்த பகுதியில் விபத்துக்களை கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என பொதுமக்கள் பலமுறை கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.எனவே, பூந்தோட்டம் வளைவு பாதையில் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் வகையில் தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : accidents ,garden area ,Nerur ,
× RELATED இரு வேறு விபத்துகளில் வாட்ச்மேன் உட்பட இருவர் பலி