×

யாகசாலை பூஜை கரூர் நகராட்சி பகுதியில் சுற்றித்திரியும் நாய்களால் மக்கள் கடும் அவதி

கரூர், டிச. 3: கரூர் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவு தெரு நாய்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களால் ஏராளமானோர் வாகன விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். மேலும், நாய்க்கடி காரணமாக பல்வேறு தொந்தரவுகளுக்கும் மக்கள் ஆளாகி வருகின்றனர். விலங்கு சம்பந்தப்பட்ட அமைப்புகள் காரணமாக நாய்களுக்கு குக செய்யும் திட்டம் நகராட்சி சார்பில் கொண்டு வரப்பட்டது. ஒரு சில மாதங்கள் மட்டும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்ட நிலையில் தற்போது இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.இதனால், கரூர் நகராட்சிக்குட்பட்ட அனைத்து தரப்பினர்களும் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

Tags : Yakshala ,Puja People ,area ,Karur ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...