×

ஒகேனக்கல் கூட்டுகுடிநீர் திட்ட பணியை கலெக்டர் ஆய்வு

தர்மபுரி, டிச.3: தர்மபுரி மாவட்ட எல்லையில் உள்ள பிலிகுண்டுலு காவிரி ஆற்றில் கலெக்டர் கார்த்திகா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறித்து, இளநிலை பொறியாளரிடம் கேட்டறிந்தார்.
மேலும், ஆலம்பாடியில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தடை செய்யப்பட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் அனுமதியின்றி குளிப்பதை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து, ஜல்சக்தி அபியான் திட்டத்தில் ₹450 கோடி மதிப்பில், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்-2ஐ செயல்படுத்த, ஒகேனக்கல் முதலை பண்ணை அருகே தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தை பார்வையிட்டார். பின்னர், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட நீர் உறிஞ்சு நிலையம், நீர் சுத்திகரிப்பு நிலையம், நீருந்து நிலையம், சமநிலை நீர்த்தேக்கம் ஆகிய இடங்களில் நேரில் பார்வையிட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, ஆர்டிஓ (பொ) தணிகாசலம், ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட அலுவலர் சங்கரன், தாசில்தார் சேதுலிங்கம், பிடிஓக்கள் ஆனந்தன், ரேணுகாஅம்மாள், உதவி பொறியாளர்கள் மாலதி, சீனிவாசன், சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Okanagan ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி