×

ரேஷன் கடைகளில் கல்லும், மண்ணும் நிறைந்த கொண்டைக்கடலை சப்ளை

குமாரபாளையம், டிச.3: குமாரபாளையம் கோட்டைமேடு ரேஷன் கடையில், நேற்று  கார்டுதாரர்களுக்கு  கொண்டைக்கடலை இலவசமாக வழங்கப்பட்டது. இதை  பொதுமக்கள் போட்டி போட்டு வாங்கிச்சென்றனர்.
ஆனால்  கொண்டைக்கடலையுடன், ஏராளமான கல்லும், மண்ணும் கலந்திருந்தது. 5 கிலோ என  வழங்கிய கொண்டைக்கடலையில், சுமார் அரை கிலோ அளவுக்கு சிறு கற்கள் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இலவசமாக  வழங்கப்பட்டது என்பதால், வேறு வழியின்றி வீட்டிற்கு வாங்கிச்சென்றனர். இதுகுறித்து  பள்ளிபாளையம் ஒன்றியக்குழு திமுக உறுப்பினர் தனசேகரன்  கூறுகையில், ‘அரசு இலவசமாக கொண்டைக்கடலை வழங்கினாலும், அதன் தரத்தை  அதிகாரிகள் கண்காணிக்கவில்லை. கல்லும், மண்ணும் நிறைந்த கடலையை கொடுத்து  மக்களின் வெறுப்பை பெற்றுள்ளனர்,’ என்றார்.

Tags : ration shops ,
× RELATED ரேஷன் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு