திண்டுக்கல், டிச.3: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும் திமுக துணைப்பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி எம்எல்ஏ கூறினார். `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ சுற்றுப்பயணத்தின் முதல் நாளான நேற்று அவர் திண்டுக்கல் ஒன்றியத்தில் தனது சுற்றுப் பயணத்தை துவக்கினார். அப்போது பெரியகோட்டை பகுதியில் வயல் வெளிகளில் வேலை பார்த்துவந்த பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். சீலப்பாடி தேசிய ஊரக 100 நாள் வேலை திட்டத்தில் வேலை பார்த்து வரும் பெண்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், கொரோனா காலத்தில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பற்றி அதிமுக அரசு சிந்திக்கவில்லை. மக்கள் மத்தியில் வாக்குகள் கேட்க அக்கட்சிக்கு என்ன உரிமை இருக்கிறது? ஏழை, எளிய மக்கள் கொரோனாவால் பலர் இறந்தார்கள். அங்கு எட்டிப் பார்க்காத அதிமுக, மக்களிடம் வாக்கு கேட்க உரிமை இருக்கிறது?