கொடைக்கானல், டிச. 3: கொடைக்கானலில் புயல் முன்னெச்சரிக்கையாக சுற்றுலா தலங்கள் மூடப்பட்டன. அத்துடன் சுற்றுலா பயணிகள் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது. மேகம் மூட்டத்துடன் உள்ளது. இந்நிலையில் தென் தமிழகத்திற்கு புயல் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக கொடைக்கானல் வனத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள சுற்றுலா இடங்களான தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட் ஆகிய சுற்றுலா இடங்கள் நேற்று மூடப்பட்டுள்ளது. கொடைக்கானலில் அடித்து வரும் காற்றின் காரணமாகவும், புயல் முன்னெச்சரிக்கை காரணமாகவும் மரங்கள் விழுந்து சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் சூழல் நிலவுகிறது. இதனால் சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளது.