ஸ்பிக்நகர், டிச.3: தூத்துக்குடியில் மனைவியை கொலைசெய்துவிட்டு இருமாதங்களாக தலைமறைவாக இருந்துவந்த தொழிலாளியை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தூத்துக்குடி, முத்தையாபுரம் தவசிப்பெருமாள் சாலை பகுதியைச் சேர்ந்த நடராஜன் மகன் கருப்பசாமி (45). கூலி தொழிலாளியான இவர், கடந்த செப். 29ம் தேதி தனது மனைவி சண்முகலட்சுமியின் (40) தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தலைமறைவானார். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த முத்தையாபுரம் போலீசார் விசாரணை நடத்தினர்.