கோவில்பட்டியில் மதிமுகவினர் மறியல்

கோவில்பட்டி, டிச. 3: டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளை ஆதரித்து கோவில்பட்டியில் மதிமுகவினர் மறியலில் ஈடுபட்டனர். கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகம் முன் மதிமுக  விவசாய அணி சார்பில் நடந்த இந்த மறியல் போராட்டத்திற்கு விவசாய அணி மாநில துணைச்செயலாளர்  ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாநில விவசாய அணி துணைச் செயலாளர்  சிவகுமார் முன்னிலை வகித்தார். மீனவர் அணி செயலாளர் நக்கீரன், நகரச்  செயலாளர் பால்ராஜ், முன்னாள் செயலாளர் கணேசன், ஒன்றியச் செயலாளர்கள்  அழகர்சாமி, எரிமலைவரதன், மாணவர் அணி ராஜசேகர் மற்றும் பால்ராஜ்,  ராஜகுரு, தெய்வேந்திரன், முத்துபாண்டி, சரவணன், வனராஜன், ராம்குமார்,  லவராஜா, கேசவன், செண்பகராஜ், நாகராஜன், வில்லிசேரி நவநீதகிருஷ்ணன்,  ராஜகுரு, ராஜ்குமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி  கோஷமிட்டனர்.

Related Stories: