×

துணி வாங்குவது போல் நடித்து சட்டைகள் திருடிய 2 பெண்கள் கைது

சிதம்பரம், டிச. 3: சிதம்பரம் மேலவீதியில் குலாம் முகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. நேற்று முன்தினம் இரவு இந்த கடைக்கு 2 பெண்கள் ஜவுளி எடுக்க வந்துள்ளனர். அப்போது அவர்கள் துணி எடுப்பது போல் நடித்து 4 சட்டைகளை தங்களது புடவையில் மறைத்து வைத்து எடுத்துச் சென்றனர்.இதை சிசிடிவி காட்சிகள் மூலம் பார்த்த கடை உரிமையாளர் அவர்களை கையும் களவுமாக பிடித்து சிதம்பரம் நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் விசாரணையில், இருவரும் கடலூர் வண்டிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சாந்தி (55) மற்றும் அபிராமி (43) ஆகியோர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவர் மீதும் போலீசார் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : women ,
× RELATED மதுரையில் மீனாட்சியம்மன்...