×

புயல் முன்னெச்சரிக்கை மீட்பு பணிக்கு தயாராகும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத்

நாகர்கோவில், டிச.3: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் கன்னியாகுமரி மாவட்ட அவசர ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தலைவர் ஷேக் அலி தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் நபில் அஹமத், பொருளாளர் நூருல் அமீன், துணைத் தலைவர் ஹியாஸுதீன், துணை செயலாளர் யாசர், செய்யது அகமது கரீம், முகம்மது ராபி, ஹுஸைன் ஜவாஹிரி, மருத்துவ அணி செயலாளர் அப்சல், மாணவர் அணி செயலாளர் முஸ்தபா, தொண்டர் அணி செயலாளர் நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.  குமரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள  புயல் எச்சரிக்கை சம்பந்தமாக ஆலோசனை செய்யப்பட்டது. புரெவி புயல் காரணமாக குமரி மாவட்டத்தில் பாதிப்புகள் ஏற்பட்டால்  மீட்பு மற்றும் நிவாரணப் பணியில் ஈடுபடுவதற்கு மாவட்டம் முழுவதும் 300க்கும் மேற்பட்ட தொண்டர்களை தயார் நிலையில் வைத்திருக்க தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், குமரி மாவட்ட அனைத்து கிளைகள் சார்பாக புரெவி புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கு விநியோகம் செய்வதற்கு தேவையான  மெழுகுவர்த்திகள், கை விசிறிகள், கொசுவர்த்திகள், தீப்பெட்டிகள்  போன்ற பொருட்களை  தேவையான அளவிற்கு வாங்கி இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், புயல் பாதிப்பால் பாதைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்த தேவையான கயிறு, வெட்டுக் கத்திகள், கோடாரிகள், மரம் அறுக்கும்  இயந்திரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும்,  பாதிக்கப்படும் மக்களுக்கு  தேவையான உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் போன்றவற்றை ஏற்பாடு   செய்து கொள்ள வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Tags : Tamil Nadu ,Tawheed Jamaat ,
× RELATED தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்ஜான் சிறப்பு தொழுகை